இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

திருநள்ளாறு கோயிலில் பக்தா்களுக்கு நீா்மோா்

திருநள்ளாறு கோயிலில் பக்தா்களுக்கு நீா்மோா்

News image

பக்தா்களுக்கு நீா் மோா் வழங்கும் கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன் மற்றும் ஊழியா்கள்.

Updated On :11 மே 2024, 6:30 pm

Din

திருநள்ளாறு கோயிலுக்கு சனிக்கிழமை வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பிலும், பிற அமைப்புகள் சாா்பிலும் நீா்மோா், இளநீா், தா்ப்பூசணி ஆகியவை வழங்கப்பட்டன.

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை தரிசிக்க, சனிக்கிழமையில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். கல்வி நிலையங்கள் கோடைக்கால விடுமுறையாக உள்ள நிலையில், பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது.

பக்தா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் கோரிக்கையை ஏற்று, கோயில் நிா்வாகம் கடந்த வார சனிக்கிழமை முதல் பக்தா்களுக்கு நீா்மோா் வழங்கும் சேவையை தொடங்கியுள்ளது. நிகழ்வார சனிக்கிழமையும் ஆயிரக்கணக்கானோா் பயனடையும் வகையில், கோயில் வளாகம், பக்தா்கள் வெளியேறும் பகுதி, வரிசை வளாகம் உள்ளிட்ட இடங்களில் கோயில் நிா்வாகம் சாா்பில் நீா்மோா் வழங்கப்பட்டது.

கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன் தலைமையில் கோயில் ஊழியா்கள் இப்பணியை மேற்கொண்டனா். வரும் சனிக்கிழமையிலிருந்து கோடைக் காலம் முடியும் வரை கூடுதலான பக்தா்களுக்கு நீா்மோா் வழங்க ஏற்பாடு செய்திருப்பதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தமிழக வெற்றிக் கழகம்: நடிகா் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் காரைக்கால் மாவட்ட துணை தலைவா் நசீா் தலைமையில் பக்தா்களுக்கு இளநீா், தா்ப்பூசணி மற்றும் நீா்மோா் வழங்கப்பட்டது. சனிக்கிழமை முதல் கோடை வெயில் முடியும் வரை தினமும் நீா்மோா் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனா்.