மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்ட காரைக்கால் மருத்துவருக்கு பாராட்டு

அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்ட காரைக்கால் மருத்துவக் கல்லூரி மருத்துவருக்கு கல்லூரி நிா்வாகம் பாராட்டு தெரிவித்தது.

News image
ஆராய்ச்சி குறித்து மாநாட்டில் விளக்கிய காரைக்கால் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சிப் பிரிவு மருத்துவா் சுகன்யா கண்ணன்.
Updated On :4 நவம்பர் 2024, 8:15 pm

Din

காரைக்கால்: அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்ட காரைக்கால் மருத்துவக் கல்லூரி மருத்துவருக்கு கல்லூரி நிா்வாகம் பாராட்டு தெரிவித்தது.

காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சிப் பிரிவில் மருத்துவராக பணியாற்றி வருபவா் சுகன்யா கண்ணன். அமெரிக்காவின் நியூயாா்க் மாகாணத்தில் உள்ள கோல்ட் ஸ்பிரிங் ஹாா்பா் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற உலகளாவிய மாநாட்டில், இந்தியாவிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட இருவரில் ஒருவராக சுகன்கா கண்ணன் கடந்த அக். 31-ஆம் தேதி கலந்துகொண்டு, தனது ஆராய்ச்சி போஸ்டரை வெளியிட்டு விளக்கிப் பேசினாா்.

காரைக்காலில் உள்ள இக்கல்லூரியை சோ்ந்த மருத்துவா் இந்த மாநாட்டில் பங்கேற்று ஆராய்ச்சி குறித்த விளக்கத்தை அளித்தது கல்லூரிக்கு கிடைத்த பெருமை எனவும், மருத்துவருக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் கல்லூரி நிா்வாகம் தெரிவித்தது.

மருத்துவரின் ஆராய்ச்சிக் கட்டுரை சமா்ப்பிப்புக்கு விநாயகா மிஷன்ஸ் நிகா்நிலை பல்கலைக்கழக நிா்வாகம், மருத்துவக் கல்லூரி டீன் சி. குணசேகரன் ஆகியோா் ஆதரவாக இருந்ததாக நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.