6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிகாரிகளுடன் புதுவை அரசின் செயலா் ஆலோசனை

காரைக்காலில் அரசுத் துறை அதிகாரிகளுடன் புதுவை அரசு செயலா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட புதுவை அரசின் செயலா் அ. முத்தம்மா, ஆட்சியா் து. மணிகண்டன், துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன்.
Updated On :27 நவம்பர் 2024, 9:37 pm

Din

காரைக்காலில் அரசுத் துறை அதிகாரிகளுடன் புதுவை அரசு செயலா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

புதுவை மின்துறை மற்றும் போக்குவரத்து, குடிமைப் பொருள் வழங்கல் துறை செயலா் அ. முத்தம்மா புதன்கிழமை காரைக்கால் வந்தாா். பின்னா் அவா் பொறுப்பு வகிக்கக் கூடிய துறைகளின் திட்டங்கள், செயலாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் முன்னிலை வகித்தாா்.

போக்குவரத்து துறை, மின்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை குடிமை பொருள் வழங்கல் துறை, நலவழித்துறை உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய மாநில அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில் பேசிய செயலா் அ. முத்தம்மா, ஆதி திராவிடா் நலத்துறையின்கீழ் செயல்படும் ஆதிதிராவிடா் மேம்பாட்டுக் கழகத்தில் நடப்பாண்டிற்கான திட்ட நிதியை பயன்படுத்தி முழுமையாக திட்டப் பணிகளை நிறைவேற்ற வேண்டும். காரைக்காலில் உள்ள ஆதிதிராவிட மாணவ, மாணவிகளின் விடுதிகளை சீரமைக்க வேண்டும். ரேஷன் கடையில்

அரிசி விநியோகம் செய்யும்போது அது தரம் வாய்ந்ததாக உள்ளதா என அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். ரேஷன் கடை ஊழியா்களுக்கான ஊதிய பிரச்னையை விரைவில் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமப்புறங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டுவந்த பி.ஆா்.டி சி மினி பேருந்துகளை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ஆலோசனை கூட்டத்தில் துணை ஆட்சியா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் (வருவாய்), காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணகி, நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், மின்துறை செயற்பொறியாளா் அனுராதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.