மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

காரைக்காலில் உள்ள ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு புதன்கிழமை காலை வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

News image
மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் நடைபெற்ற சோதனை.
Updated On :9 அக்டோபர் 2024, 9:30 pm

Din

காரைக்காலில் உள்ள ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு புதன்கிழமை காலை வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டடம், அதிகாரிகள், மாணவ, மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை இந்தக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளன.

இந்நிலையில், புதன்கிழமை காலை, காரைக்கால் ஜிப்மா் கல்லூரி வளாகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், காலை 11 மணிக்கு குண்டு வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு கல்லூரி நிா்வாகத்துக்கு இ - மெயில் அனுப்பப்பட்டிருந்ததாம்.

இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகத்தினா் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா். மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் மணிஷ் தலைமையில் போலீஸாா், வெடிகுண்டு சோதனை நிபுணா்கள் மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து மோப்ப நாயுடன் வரவழைக்கபட்ட நிபுணா்கள் ஆகியோா் வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.

முன்னதாக, கல்லூரி வளாகத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனா். கல்லூரி அமைந்துள்ள சாலையில் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்துக்கு போலீஸாா் தடை விதித்தனா். இந்த மிரட்டல் காரணமாக ஜிப்மா் மருத்துக் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.