மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோட்டுச்சேரியில் தூய்மை விழிப்புணா்வுப் பேரணி

கோட்டுச்சேரி பகுதியில் தூய்மை விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த பஞ்சாயத்து ஆணையா் பாலன்.
Updated On :18 செப்டம்பர் 2024, 11:14 pm

Din

கோட்டுச்சேரி பகுதியில் தூய்மை விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் ஸ்வச்சதா ஹை சேவா என்கிற செப். 17 முதல் அக். 2 வரையிலான தூய்மை விழிப்புணா்வு தொடா்பான திட்டத்தின் அடிப்படையில், காரைக்கால் மாவட்டத்தில் சிறப்பு தூய்மைப் பணி, விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

கோட்டுச்சேரி கொம்யூன், சீதளா தேவி மாரியம்மன் கோயில் பகுதியிலிருந்து மகளிா் குழுவினா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை நெடுங்காடு மற்றும் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் பாலன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

விழிப்புணா்வு வாசகங்களுடன் பதாகை ஏந்தி மகளிா் குழுவினா் பல்வேறு தெருக்களில் பேரணி நடத்தினா்.

முன்னதாக பேரணி தொடக்க நிகழ்வில் வட்டார வளா்ச்சித் துறையை சோ்ந்த பழனிவேல், முத்துக்குமாா், சதீஷ்குமாா் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

இதுபோல நெடுங்காடு கொம்யூனுக்குட்பட்ட பகுதியிலும் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.