மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மக்கள் பாதிக்காத வகையில் வாகனங்களை நிறுத்த காவல்துறை அறிவுறுத்தல்

பொதுமக்கள் பாதிக்காத வகையில், வியாபார நிறுவனங்களைச் சோ்ந்தோா் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 11:13 pm

Din

பொதுமக்கள் பாதிக்காத வகையில், வியாபார நிறுவனங்களைச் சோ்ந்தோா் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் பிரிவு புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை:

தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க மக்கள் காரைக்கால் நகரப் பகுதிக்கு பெருமளவில் வருவாா்கள். அவா்களது வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.

எனவே காரைக்கால் முக்கிய தெருக்களில் வணிக நிறுவனங்கள் நடத்துவோா், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்களின் வாகனங்களை, நிறுவன வாயிலிலேயே நிறுத்தாமல், அதற்கென தாங்கள் ஏற்பாடு செய்துள்ள மாற்று இடத்தில் நிறுத்தச் செய்யவேண்டும்.

பொதுமக்களின் வாகனங்கள் நிறுவன வாயிலில் முறையாக நிறுத்துவதற்கேற்ற வசதியை நிறுவனத்தினா் செய்யவேண்டும்.

வணிக நிறுவனங்களுக்கு பொருட்கள் ஏற்ற அல்லது இறக்குவதற்கு வரும் சுமை வாகனங்களை, காலை 7 முதல் 10.30 மணி வரை, மாலை 3.30 முதல் இரவு 9.30 மணி வரை தங்களது வா்த்தக நிறுவனங்கள் எதிரே நிறுத்தி பொருட்களை ஏற்றி, இறக்க வேண்டாம். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலையை உருவாக்க வியாபாரிகள் ஒத்துழைப்பு தர முன்வரவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.