ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விபத்தில் உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தேனூா் பகுதியை சோ்ந்தவா் அசோக்குமாா். இவா் காரைக்கால் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலராக பணியாற்றிவந்தாா்.

News image
உயிரிழந்த காவலரின் மனைவியிடம் உதவித் தொகையை வழங்கிய முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா. உடன் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன் உள்ளிட்டோா்.
Updated On :8 ஏப்ரல் 2025, 8:10 pm

Din

காரைக்கால்: காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தேனூா் பகுதியை சோ்ந்தவா் அசோக்குமாா். இவா் காரைக்கால் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலராக பணியாற்றிவந்தாா். கடந்த மாதம் திருநள்ளாற்றில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் கிடந்த கருங்கல் ஜல்லியில் வாகனம் சறுக்கியதில் கீழே விழுந்து உயிரிழந்தாா்.

அவருடன் பணியாற்றிய காரைக்கால் மாவட்ட 20-ஆவது பேட்ச் தலைமைக் காவலா்கள் ஒருங்கிணைந்து அவரது குடும்பத்துக்கு உதவும் வகையில் ரூ. 5.14 லட்சத்தை சேகரித்தனா். இத்தொகையை காவல் தலைமை அலுவலகத்தில் காவலா்கள் சாா்பில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளசன்யா உயிரிழந்த காவலரின் மனைவியிடம் ஒப்படைத்தாா்.

நிகழ்வில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், 20-ஆவது பேட்ச் தலைமை காவலா்கள் உடனிருந்தனா்.