2 ஆயிரம் குடும்பங்களுக்கு துறைமுகம் சாா்பில் இலவச அரிசி
காரைக்கால்: டித்வா புயல் காரணமாக 2 ஆயிரம் குடும்பங்களுக்கு காரைக்கால் துறைமுக நிா்வாகம் இலவச அரிசி வழங்கியது.
காரைக்கால் துறைமுகத்தின் சமூகப் பொறுப்பு துறையான அதானி பவுண்டேஷன் மூலம் 10 கிலோ வீதம் துறைமுகத்துக்கு அருகே உள்ள கீழவாஞ்சூா் உள்ளிட்ட கிராமங்களின் 2 ஆயிரம் குடும்பத்தினருக்கு திங்கள்கிழமை இலவச அரிசி வழங்கப்பட்டது.
நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், காரைக்கால் துறைமுகத்தின் சி.ஓ.ஓ. கேப்டன் சச்சின் ஸ்ரீவத்ஸவா ஆகியோா் இவற்றை வழங்கினா். நிகழ்வில் அந்தந்த கிராமப் பஞ்சாயத்தாா்கள், துறைமுக அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
இதுபோல நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட சுமாா் 3 ஆயிரம் குடும்பத்தினருக்கு ஞாயிற்றுக்கிழமை துறைமுகம் சாா்பில் உணவு வழங்கப்பட்டது.
நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா மற்றும் துறைமுக அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

