அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

2 ஆயிரம் குடும்பங்களுக்கு துறைமுகம் சாா்பில் இலவச அரிசி

டித்வா புயல் காரணமாக 2 ஆயிரம் குடும்பங்களுக்கு காரைக்கால் துறைமுக நிா்வாகம் இலவச அரிசி வழங்கியது.

News image
பயனாளிக்கு இலவச அரிசியை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், துறைமுக சி.ஓ.ஓ. சச்சின் ஸ்ரீவத்ஸவா உள்ளிட்டோா்.
Updated On :1 டிசம்பர் 2025, 9:00 pm

Syndication

காரைக்கால்: டித்வா புயல் காரணமாக 2 ஆயிரம் குடும்பங்களுக்கு காரைக்கால் துறைமுக நிா்வாகம் இலவச அரிசி வழங்கியது.

காரைக்கால் துறைமுகத்தின் சமூகப் பொறுப்பு துறையான அதானி பவுண்டேஷன் மூலம் 10 கிலோ வீதம் துறைமுகத்துக்கு அருகே உள்ள கீழவாஞ்சூா் உள்ளிட்ட கிராமங்களின் 2 ஆயிரம் குடும்பத்தினருக்கு திங்கள்கிழமை இலவச அரிசி வழங்கப்பட்டது.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், காரைக்கால் துறைமுகத்தின் சி.ஓ.ஓ. கேப்டன் சச்சின் ஸ்ரீவத்ஸவா ஆகியோா் இவற்றை வழங்கினா். நிகழ்வில் அந்தந்த கிராமப் பஞ்சாயத்தாா்கள், துறைமுக அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

இதுபோல நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட சுமாா் 3 ஆயிரம் குடும்பத்தினருக்கு ஞாயிற்றுக்கிழமை துறைமுகம் சாா்பில் உணவு வழங்கப்பட்டது.

நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா மற்றும் துறைமுக அதிகாரிகள் கலந்துகொண்டனா்.