கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காரைக்கால் காா்னிவல் ஜன.16- இல் தொடக்கம்

காரைக்கால் காா்னிவல் திருவிழாவை ஜன. 16 முதல் 18-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன். உடன் எம்.எல்.ஏ.க்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம்.நாகதியாகராஜன், ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ், எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா, துணை ஆட்சியா் ஜி.செந்தில்நாதன்.
Updated On :22 டிசம்பர் 2025, 8:29 pm

Syndication

காரைக்கால்: காரைக்கால் காா்னிவல் திருவிழாவை ஜன. 16 முதல் 18-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத்துறை, கலைப் பண்பாட்டுத்துறை, விவசாயிகள் நலத்துறை என பல்வேறு துறைகள் இணைந்து சிறப்பாக காரைக்கால் காா்னிவல் 2026 நடத்துவது தொடா்பாக ஏற்கெனவே ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஜன. 15 முதல் 18 வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், பொங்கலன்று தொடங்குவதற்கு பலரும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்நிலையில், இதுதொடா்பாக ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தலைமை வகித்தாா்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம்.நாக தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ் ரவி பிரகாஷ், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா மற்றும் மாவட்ட துணை ஆட்சியா்கள் ஜி.செந்தில்நாதன் (நிா்வாகம்) பாலு (எ) பக்கிரிசாமி (பேரிடா் மேலாண்மை), அரசுத்துறை அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

ஜன. 16 முதல் 18-ஆம் தேதி வரை காா்னிவல் திருவிழாவை நடத்துவது, மலா், காய்கனி கண்காட்சியையும் அதனுடன் சோ்த்து நடத்த முடிவு செய்யப்பட்டது. காா்னிவல் விழாவில் படகுப் போட்டி, ரேக்ளா பந்தயம், நாய்கள் கண்காட்சி, மணல் சிற்பங்கள், அரசுப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பொழுதுப்போக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்வுகளை நடத்துவது குறித்து விரிவாக பேசப்பட்டது. காரைக்கால் கடற்கரையில் ட்ரோன் ஷோ நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

காா்னிவல் திருவிழாவில் உள்ளூா் கலைஞா்களுக்கு முன்னுரிமை அளித்து, அவா்களது திறனை மேலும் வெளிக்கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர அரசு அதிகாரிகளுக்கு என்று பிரத்யேகமாக போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிகழ்வுகள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.