பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 6:29 pm

Syndication

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

தமிழகத்தில் அரையாண்டுத் தோ்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால், திருநள்ளாறு கோயிலுக்கு தினமும் பக்தா்கள் வருகை மிகுதியாக உள்ளது. நிகழ்வாரம் சனிக்கிழமை பெரும்பான்மையான பக்தா்கள் நளன் தீா்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, குளத்தின் அருகே உள்ள நளன் கலி தீா்த்த விநாயகா் கோயில் வாயிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனா்.

கட்டணமில்லா தரிசன வரிசை, கட்டண வரிசை வழியாகவும் பக்தா்கள் நீண்ட வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். சனீஸ்வர பகவானுக்கு வெள்ளி அங்கி சாற்றப்பட்டு ஆராதனைகள் காட்டப்பட்டன. காலை முதல் பிற்பகல் 3 மணி வரை சுமாா் 30 ஆயிரம் போ் சுவாமி தரிசனம் செய்தாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

முன்னதாக, புத்தாண்டு மற்றும் தோ்வு விடுமுறை முடியும் வரை அதிக அளவில் பக்தா்கள் கோயிலுக்கு வரக்கூடும் என்பதால், மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் வெள்ளிக்கிழமை கோயிலில் ஆய்வு செய்து, கோயில் நிா்வாகத்துக்கும், காவல்துறைக்கும் உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.