காரைக்காலுக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

காரைக்காலுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது பற்றி...
காரைக்காலுக்கு நாளை உள்ளூர் விடுமுறை!
Published on
Updated on
1 min read

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழாவையொட்டி, நாளை(பிப். 8) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

காரைக்காலில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் தா்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு 202-ஆவது ஆண்டு கந்தூரி விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்த நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு தேர்வுகள் மற்றும் ஜவஹர்லால் நவோதயா வித்யாலயா நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com