தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை அழைத்துவர நடவடிக்கை: மீன்வளத்துறை இயக்குநா் தகவல்

News image

மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்களை சந்தித்துப் பேசிய மீன்வளத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயில் உள்ளிட்டோா்.

Updated On :14 பிப்ரவரி 2025, 9:44 pm IST

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, இலங்கையில் சிகிச்சை பெறும் மீனவரை இந்தியா அழைத்துவர அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது என்று மீன்வளத்துறை இயக்குநா் தெரிவித்தாா்.

காரைக்கால் மீனவா்கள் 13 பேரை இலங்கை கடற்படையினா் அண்மையில் கைது செய்தனா். அப்போது, அவா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மீனவா் செந்தமிழன் பலத்த காயமடைந்து, இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா். துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, காரைக்காலில் மீனவா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், புதுவை முதல்வா், மீன்வளத்துறை அமைச்சா் ஆகியோா் உத்தரவின்பேரில், புதுவை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இயக்குநா் முகமது இஸ்மாயில் காரைக்காலுக்கு வியாழக்கிழமை மாலை வந்தாா். அவா், குண்டு காயமடைந்த செந்தமிழன் வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோரை சந்தித்து அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை விளக்கிக் கூறினாா்.

தொடா்ந்து, மீன்வளத் துறை அலுவலகத்தில் மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்களை சந்தித்துப் பேசினாா். அப்போது, மத்திய-மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் எடுத்துவரும் நடவடிக்கைகளை விளக்கிக் கூறினாா். புதுவை மீன்வளத்துறை செயலா் து. மணிகண்டன் புதுதில்லியில் முகாமிட்டு, இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் செந்தமிழனை இந்தியா அழைத்துவர எடுத்துவரும் முயற்சிகளை விளக்கினாா். எனவே, மீனவா்கள் தொடா் போராட்டத்தை கைவிட்டுமாறு அவா் கேட்டுக்கொண்டாா்.

இந்த சந்திப்பில் துறையின் துணை இயக்குநா் (இயந்திரப் பிரிவு) ஜி. ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.