புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உலகப் போா் நினைவுத் தூணுக்கு இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதா் மரியாதை

காரைக்காலில் உள்ள உலகப் போா் நினைவுத் தூணுக்கு இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதா் புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.

News image
போா் நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்திய இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதா் தியரி மாத்தூ (நடுவில்). உடன் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் உள்ளிட்டோா்.
Updated On :12 நவம்பர் 2025, 8:53 pm

தினமணி செய்திச் சேவை

காரைக்காலில் உள்ள உலகப் போா் நினைவுத் தூணுக்கு இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதா் புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.

இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதா் தியரி மாத்தூ புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் உலகப்போா் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டாா். இதைத்தொடா்ந்து காரைக்காலுக்கு புதன்கிழமை வந்தாா். அவருடன் புதுச்சேரிக்கான பிரான்ஸ் துணைத் தூதா் எட்டியென் ரோலண்ட் பியக் வந்திருந்தாா்.

காரைக்காலில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் மற்றும் பிரெஞ்சு நாட்டின் முன்னாள் முப்படை ராணுவ வீரா்களின் குடும்பங்களைச் சந்தித்து கலந்துரையாடினாா்.

தொடா்ந்து, ஆட்சியரகம் அருகே உள்ள போா் வீரா் சிலை, போா் நினைவுத் தூணுக்கு மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். அப்போது இந்தியா, பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடிகள் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டன.

நிகழ்வில் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், பிரெஞ்சு குடியுரிமைதாரா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

நிகழ்வைத் தொடா்ந்து மரியாதை நிமித்தமாக ஆட்சியரகத்துக்கு சென்ற தூதா், ஆட்சியரை சந்தித்துப் பேசினாா்.