தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புதுவையில் 3 மாத்திரைகளுக்கு தடை

தரம் குறைந்ததாக உறுதிப்படுத்திய நிலையில், புதுவையில் 3 மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :25 பிப்ரவரி 2026, 11:08 pm

தினமணி செய்திச் சேவை

தரம் குறைந்ததாக உறுதிப்படுத்திய நிலையில், புதுவையில் 3 மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி இ.அனந்தகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை :

ஹிமாசல பிரதேச மாநிலம், பயோன்டோ சாஹிப், தொழிற்பேட்டை, சீ லேபாரட்டரீஸ் நிறுவனத்தில் நிகோரான்டில் மாத்திரை ஐ.பி.5 எம்ஜி (நிகோவேஸ்-5) பி. நம்பா். 425 உரிய தரத்தில் இல்லாததாக உறுதிப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதே மாநிலத்தைச் சோ்ந்த சோலன் பகுதி சான் -சிடோ தெராபிடிக்ஸ் இன்ச் வில் லோகரானில் தயாரிக்கப்படும் அசிபிரோபைத்லின் மற்றும் அசிடைல்சிடைன் என்கிற (முகோஃபாா்ம் -ஏபி) மாத்திரை பேட்ச் எண்.எஸ்பி-9620 மற்றும் பான்டோ சாஹிப் பகுதி தொழிற்பேட்டையில் லேபாரேட் பாா்மாசிடிக்கல்ஸ் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் அசிக்ரோஃபெனாக் பாராசிடமால் மாத்திரை பேட்ச் எண்.ஏசிஏயுடி-077 தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் கொள்முதல் செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. மருந்துக் கடைகளில் கையிருப்பில் இருக்கும் இந்த மாத்திரையை உற்பத்தி நிறுவனத்துக்கு திரும்பி அனுப்பவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.