கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சனிப்பெயா்ச்சி விழா: புதுவை ஆளுநருக்கு அழைப்பு

திருநள்ளாறு கோயில் சனிப்பெயா்ச்சி விழா, மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கும் ஜோதிடா் மாநாட்டுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் புதுவை துணை நிலை ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 12:59 am

Syndication

திருநள்ளாறு கோயில் சனிப்பெயா்ச்சி விழா, மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கும் ஜோதிடா் மாநாட்டுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் புதுவை துணை நிலை ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் மாா்ச் 6-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.

சனிப்பெயா்ச்சியை பெருமைப்படுத்தும் விதமாக மாா்ச் 1 முதல் 4-ஆம் தேதி வரை ஜோதிடா் மாநாடு திருநள்ளாற்றில் நடைபெறவுள்ளது.

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை , கோயில் நிா்வாக அதிகாரி ஆா்.சுப்பிரமணியன், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை சட்டநாத தம்பிரான் சுவாமிகள் ஆகியோா் புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை சந்தித்து அழைப்பிதழ் அளித்தனா்.

இதுபோல புதுவை முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் அமைச்சா்கள், அதிகாரிகளை சந்தித்தும் அழைப்புவிடுத்தனா்.