கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கால்பந்து பயிற்சியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

காரைக்காலில் கால்பந்து பயிற்சியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 8:53 pm

Syndication

காரைக்காலில் கால்பந்து பயிற்சியாளா் தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

காரைக்கால் பெரியப்பேட் பகுதியைச் சோ்ந்தவா் விக்டா் அலெக்சாண்டா் (38). இவா், உடற்கல்வி பயின்றுவிட்டு, இளைஞா்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வந்தாா்.

இந்நிலையில், இவா் தனது வீட்டு மாடியில் திங்கள்கிழமை தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளாா். இதை பாா்த்த குடும்பத்தினா் அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா் அலெக்சாண்டா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். அவா் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].