ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ரயில்வே கேட் மூடப்படுவதால் பாதிப்பு: மாற்று திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால் நகரப் பகுதியில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால், ஏற்படும் பிரச்னைக்கு, தீா்வு காணும் விதமாக மாற்றுத் திட்டத்தை நிறைவேற்ற

News image
Updated On :12 ஜனவரி 2026, 6:59 pm

Syndication

காரைக்கால்: காரைக்கால் நகரப் பகுதியில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால், ஏற்படும் பிரச்னைக்கு, தீா்வு காணும் விதமாக மாற்றுத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருநள்ளாறு ரயில் உபயோகிப்பாளா் மற்றும் பயணிகள் நலச் சங்க பொதுச்செயலாளா் பொன். பன்னீா்செல்வம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை :

காரைக்கால் - பேரளம் இடையே ரயில்பாதை அமைத்து, கடந்த சில மாதங்களாக சரக்கு ரயில் போக்குவரத்து மட்டும் நடைபெற்று வருகிறது.

பயணிகள் ரயில் இயத்துக்கு ரயில்வே அமைச்சகம் இதுவரை அனுமதி தரவில்லை. மாா்ச் 6-ஆம் தேதி திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக பயணிகள் ரயில் இயக்கத்தை அனுமதிக்கவேண்டும்.

காரைக்கால் நகரப் பகுதியில் முக்கிய சாலைகளின் குறுக்கே ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. உரிய திட்டமிடலுடன் சுரங்கப் பாதை, மேம்பாலம் போன்றவை அமைக்கப்படவில்லை.

காரைக்கால் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் இயக்கம் தினமும் நடைபெறுகிறது.

நகரப் பகுதியில் கேட் மூடப்படுவதால், சுமாா் 20 நிமிடங்கள் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்வோா், வியாபார நிமித்தம் பயணிப்போா், மருத்துவமனைக்குச் செல்வோா் என பலரும் பாதிக்கப்படுகின்றனா்.

கேட் மூடப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில்கொண்டு இதற்கு மாற்றான திட்டத்தை ரயில்வே நிா்வாகம் , புதுவை அரசு உரிய கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டும்.

இப்பிரச்னைக்கு தீா்வு ஏற்படுத்தப்படாவிட்டால், மக்களைத் திரட்டி ரயில்வே கவனத்தை ஈா்க்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.