மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாலை விபத்தில் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

காரைக்காலில் இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 12:19 am

Syndication

காரைக்கால்: காரைக்காலில் இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு, பஞ்சாட்சாரபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜூன்ராம் (20). நெடுங்காடு பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இளநிலை இறுதியாண்டு படித்து வந்தாா். இவரது நண்பா் காரைக்கால் பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் (21) அதே கல்லூரியில் படித்து வந்தாா்.

இந்தநிலையில், வியாழக்கிழமை மாலை இருவரும் இருசக்கர வாகனத்தில் காரைக்கால் கடற்கரைக்குச் சென்றுள்ளனா். வாகனத்தை தா்மராஜ் வேகமாக ஓட்டியுள்ளாா். கடற்கரை அருகே வ.உ.சி. புறவழிச்சாலையில் சென்றபோது, திடீரென பிரேக் பிடித்தபோது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இருவரும் சாலையில் விழுந்து, சிறிது தொலைவு இழுத்துச் செல்லப்பட்டு முன்னால் சென்ற ஆட்டோவில் மோதினா். இதில் தலை உள்ளிட்ட இடங்களில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

அப்பகுதியில் இருந்த மக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

இதுகுறித்து காரைக்கால் நகர போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.