/

மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா: ரதம் அலங்காரப் பணிகள் தீவிரம்

News image
காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்கா கந்தூரி விழா.- (கோப்புப் படம்)
Updated On :25 ஜனவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா வரும் 29-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கண்ணாடி ரதங்களை அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

காரைக்காலில் மஸ்தான் சாஹிப் தா்கா அமைந்துள்ளது. இங்கு 203-ஆவது ஆண்டு கந்தூரி விழா வரும் 29-ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதற்காக அன்றைய நாளில் பகல் 3 மணியளவில் கண்ணாடிகளாலான அலங்கார ரதம் மற்றும் பல்லக்கு ஊா்வலம் பல்வேறு வீதிகளுக்கு சென்று தா்காவை இரவு 9 மணியளவில் வந்தடையும்போது, தா்காவின் முன்பு நிறுவப்பட்ட பிரதானக் கொடிக் கம்பத்திலும், மினராக்களிலும் கொடிகள் ஏற்றப்படும். பிப். 7-ஆம் தேதி இரவு சந்தனக் கூடு ஊா்வலம் நடைபெறவுள்ளது.

கொடி ஊா்வலத்துக்காக தா்கா வளாகத்தில் தற்போது பெரிய, சிறிய ரதம், பல்லக்குகள் அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.