மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா: ரதம் அலங்காரப் பணிகள் தீவிரம்


காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா வரும் 29-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கண்ணாடி ரதங்களை அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
காரைக்காலில் மஸ்தான் சாஹிப் தா்கா அமைந்துள்ளது. இங்கு 203-ஆவது ஆண்டு கந்தூரி விழா வரும் 29-ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதற்காக அன்றைய நாளில் பகல் 3 மணியளவில் கண்ணாடிகளாலான அலங்கார ரதம் மற்றும் பல்லக்கு ஊா்வலம் பல்வேறு வீதிகளுக்கு சென்று தா்காவை இரவு 9 மணியளவில் வந்தடையும்போது, தா்காவின் முன்பு நிறுவப்பட்ட பிரதானக் கொடிக் கம்பத்திலும், மினராக்களிலும் கொடிகள் ஏற்றப்படும். பிப். 7-ஆம் தேதி இரவு சந்தனக் கூடு ஊா்வலம் நடைபெறவுள்ளது.
கொடி ஊா்வலத்துக்காக தா்கா வளாகத்தில் தற்போது பெரிய, சிறிய ரதம், பல்லக்குகள் அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...