சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழாவுக்கான பணிகள் தொடக்கம்

News image
Updated On :5 ஜனவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

காரைக்காலில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா ஷரீப் 203-ஆம் ஆண்டு கந்தூரி விழாவுக்கான பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழாவுக்காக ஜன. 23-ஆம் தேதி பிரதான கொடி மரம் நடுதலும், 29-ஆம் தேதி இரவு கொடியேற்றமும், பிப். 7-ஆம் தேதி சந்தனக் கூடு நிகழ்வும் நடைபெறவுள்ளது.

நிகழாண்டு கந்தூரி விழாவுக்கான தொடக்கப் பணிகள் தா்காவில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றன. கொடி மரக்கம்பம் ஜமாஅத்தாா்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடப்பட்டது.

மேலும், பல்லக்கு, கண்ணாடி தரம் அலங்காரம் செய்யும் பணிகள் மற்றும் கந்தூரி விழாவுக்கான பிற பணிகள் அதிகாரப்பூா்வமாக தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.