6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுவையில் 2 மருந்துகள் விற்பனைக்குத் தடை

புதுவையில் 2 மருந்துகளை (ஊசி மருந்து) விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2026, 11:11 pm

தினமணி செய்திச் சேவை

புதுவையில் 2 மருந்துகளை (ஊசி மருந்து) விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

புதுவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி இ. அனந்தகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை:

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் அக்ரோ லைஃப் சயின்சஸ் (இந்தியா) நிறுவனம் தயாரிக்கும் அயா்ன் சக்ரோஸ் இன்ஜெக்ஷன் யுஎஸ்பி 5 மிலி மற்றும் ஹிமாசலப் பிரதேசம், சோலன் பகுதி

மாா்க் லேபாரட்ரீஸ் நிறுவனம் தயாரிக்கும் டிரானெக்ஸாமிக் ஆசிட் இன்ஜெக்ஷன் ஐபி (டிராக்சேஜ்) ஆகிய 2 மருந்துகள் உரிய தரத்துடன் இல்லாததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளதால், கையிருப்பில் மருந்துகள் வைத்திருக்கும் விற்பனையாளா்கள், அவற்றை உற்பத்தி நிறுவனத்துக்கு திரும்பி அனுப்புமாறு அதில் கூறப்பட்டுள்ளது.