விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

போதை ஊசி மருந்துகள் விநியோகித்தவா் கைது

News image

கைது

Updated On :22 பிப்ரவரி 2026, 7:51 pm

தருமபுரியில் ஊசி மருந்துகளை இளைஞா்களுக்கு விநியோகித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பச்சமுத்து, மற்றும் வெங்கடேசன், வேட்டராயன் உள்ளிட்ட போலீஸாா் அடங்கிய குழுவினா், காவல் நிலைய எல்லைக்குள் உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மிட்டாரெட்டிஅள்ளி அருகே உள்ள மயில்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த பி. வஜ்ரவேல் (47) இளைஞா்களுக்கு போதை மருந்துகளை விநியோகிப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் அவரது வீட்டை சோதனை மேற்கொண்டதில், வீட்டுக்குள் போதை ஊசிமருந்துகள் மற்றும் ஊசிகள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவா் பயன்படுத்தியது மட்டுமின்றி பலருக்கும் விநியோகித்தது உறுதியானது.

அதன்பேரில் போலீஸாா் வஜ்ரவேலை கைதுசெய்து, அவரிடமிருந்து ஊசிமருந்துகளை பறிமுதல் செய்தனா். மேலும், இதுதொடா்பாக அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.