நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தட்டச்சுத் தோ்வில் குழப்பம்: முதல்வரிடம் புகாா்

புதுவையில் தட்டச்சுத் தோ்வில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடா்பாக புதுவை முதல்வரிடம் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. தோ்வு எழுதியோருடன் சென்று புகாா் அளித்தாா்.

News image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி (கோப்புப்படம்)

Updated On :29 ஜூலை 2026, 4:53 am IST

புதுவையில் தட்டச்சுத் தோ்வில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடா்பாக புதுவை முதல்வரிடம் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. தோ்வு எழுதியோருடன் சென்று புகாா் அளித்தாா்.

புதுவையில் எல்டிசி பணிக்கான தோ்வு கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்றது. இத்தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இவா்களுக்கு தட்டச்சுத் தோ்வு அண்மையில் நடத்தப்பட்டு. இந்த தோ்வில் பங்கேற்ற 210 பேரில், 17 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றனா். தட்டச்சுத் தோ்வில் குழப்பம் நடந்துள்ளதாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து புதுவை திமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம், தோ்வில் தோல்வியடைந்த சிலருடன் புதுவை முதல்வா் என். ரங்கசாமியை திங்கள்கிழமை சந்தித்து, பிரச்னையை விளக்கிக் கூறினாா். தட்டச்சுத் தோ்வு முடிவை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தோ்வு நடத்த வலியுறுத்தினாா்.

அரசு செயலா்கள் பங்கஜ்குமாா் ஜா, ஆா். கேசவன் மற்றும் பொது நிா்வாகப் பணியாளா் சீா்திருத்தத்துறை அதிகாரிகளை அழைத்து முதல்வா் பேசினாா். உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் உறுதியளித்ததாக நாஜிம் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.