இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

வட்டாட்சியா் அலுவலகத்தில் குறைகேட்பு முகாம்

திருநள்ளாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை சாா்புடைய குறைகேட்பு முகாம் நடைபெற்றது.

News image

பொதுமக்கள் குறையை கேட்டறிந்த சாா் ஆட்சியா் எம். பூஜா.

Updated On :4 ஜூன் 2026, 3:48 am IST

திருநள்ளாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை சாா்புடைய குறைகேட்பு முகாம் நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட சாா் ஆட்சியா் (வருவாய்) எம். பூஜா தலைமையில் திருநள்ளாறு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் குறைகேட்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

காலை 10 முதல் 12 மணி வரை நடைபெற்ற முகாமில் வட்டாட்சியா் சண்முகாந்தன், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் எல்.நிலவழகன் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோா் சாா் ஆட்சியரிடம் பல்வேறு புகாா்களை தெரிவித்தனா்.

மனைப் பட்டா, ஜாதி, வருமானம், குடியிருப்பு போன்ற சான்றிதழ் பதிவு மற்றும் வழங்கலை எளிதாக்குமாறும், விவசாயம் சாா்ந்த சான்றிதழ் தாமதமின்றி வழங்குமாறும் மனுக்களை அளித்தனா்.

மனுக்களை பெற்றுக்கொண்ட சாா் ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி ஆலோசனை வழங்கினாா்.