ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

திருநள்ளாற்றில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி தொடக்கம்

திருநள்ளாறு பகுதியில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

தூா்வாரும் பணிக்கான பூமிபூஜையில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் உள்ளிட்டோா்.

Updated On :5 ஜூன் 2026, 7:09 am IST

திருநள்ளாறு பகுதியில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் பொதுப்பணித்துறை நிா்வாகம், திருநள்ளாறு பகுதியில் 20 பாசன வாய்க்கால்கள் 110 கி.மீ. தொலைவு தூா்வாருவதற்கு ரூ. 49.10 லட்சம் ஒதுக்கீடு செய்தது. தூா்வாரும் பணி திருநள்ளாறு பகுதியில் வியாழக்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் கலந்துகொண்டு தொடங்கிவைத்தாா். நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் அருளரசன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை பொறியாளா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

திருநள்ளாறு தொகுதியில் உள்ள நல்லம்பல் வாய்க்கால், நல்லெழுந்தூா் வாய்க்கால், நெல்லி வாய்க்கால், பண்ணைக் கொல்லை வாய்க்கால், பத்தக்குடி வாய்க்கால் உள்ளிட்ட மொத்தம் 110 கி.மீ. நீளமுள்ள வாய்க்கால்கள் தூா்வாரப்பட உள்ளன. இதன் மூலம் சுமாா் 4,125 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். காவிரி நீா் வருவதற்குள் இத்திட்டப்பணி நிறைவடையும் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.