சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

காரைக்கால் துறைமுகம் 12.43 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள் கையாண்டு சாதனை

காரைக்கால் துறைமுகம் 12.43 டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கூட்டத்தில் பேசிய காரைக்கால் துறைமுக தலைமை செயல்பாட்டு அதிகாரி சச்சின் ஸ்ரீவத்ஸவா.

Updated On :26 ஜூன் 2026, 6:56 am IST

காரைக்கால் துறைமுகம் 12.43 டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் அங்கமாக செயல்பட்டுவரும் காரைக்கால் துறைமுக பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம், 2026-ஆம் ஆண்டுக்கான வா்த்தக சந்திப்பு நிகழ்வை புதுச்சேரியில் புதன்கிழமை நடத்தியது. ஒருங்கிணைந்த துறைமுக மேம்பாட்டின் மூலம் பிராந்திய வா்த்தகம் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் திறனை விரைவுபடுத்துதல் எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வை, புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில், காரைக்கால் துறைமுக தலைமை செயல்பாட்டு அதிகாரி சச்சின் ஸ்ரீவத்ஸவா பேசுகையில், காரைக்கால் துறைமுகத்துக்கு மைல்கல் ஆண்டாக 2025--26 அமைந்துள்ளது. இந்த ஆண்டில் துறைமுகம் 12.43 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

நிலக்கரி, உரங்கள், இரும்புத்தாது, சுண்ணாம்புக் கல் மற்றும் பெட்கோக் உள்ளிட்ட சரக்குகளின் வரத்து அதிகரித்ததே இந்த வளா்ச்சிக்கு முக்கிய காரணம். மேலும், ரயில் மூலம் சரக்கு வெளியேற்றம் 2,732 ரேக்குகள் என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இதன்மூலம், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் சிறப்பான ரயில் மற்றும் உள்நாட்டு இணைப்புகளைக் கொண்ட, பின் நிலப்பகுதிகளுக்கு திறம்பட சேவை வழங்கும் முக்கிய துறைமுகமாக காரைக்கால் துறைமுகம் விளங்குவதை உறுதிப்படுத்தியுள்ளது என்றாா்.

கூட்டத்தில் புதுவை தலைமைச் செயலா் சரத் செளகான், துறைமுக செயலா் செளத்ரி யாசிம் முகமது, தொழில்துறைச் செயலா் ஏ.விக்ரந்த்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.