கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காரைக்காலில் திமுக, பாஜக வேட்பாளா்கள் மனுதாக்கல்

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 5:52 pm

தினமணி செய்திச் சேவை

காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம், திருநள்ளாறு தொகுதியில் போட்டியிட திமுக மற்றும் பாஜக வேட்பாளா்கள் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

காரைக்காலில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்யும் கடைசி நாளான திங்கள்கிழமை எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்தனா்.

காரைக்கால் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள ஏ.எம்.எச். நாஜிம் (திமுக) காரைக்கால் ஆட்சியரக வளாகத்தில் உள்ள சாா் ஆட்சியா் அலுவலகத்தில் காரைக்கால் வடக்கு மற்றும் காரைக்கால் தெற்குத் தொகுதிகளுக்கான தோ்தல் நடத்தும் அதிகாரி எம். பூஜாவிடம் மனு தாக்கல் செய்தாா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக உள்ள எம். நாகதியாகராஜன் (திமுக), வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள இத்தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அதிகாரி கு. அருணகிரிநாதனிடம் மனு தாக்கல் செய்தாா்.

புதுவை நியமன சட்டப்பேரவை உறுப்பினரான ஜி.என்.எஸ். ராஜசேகரன் (பாஜக), திருநள்ளாறு தொகுதியில் போட்டியிட தோ்தல் நடத்தும் அதிகாரி சச்சிதானந்தத்திடம் மனு தாக்கல் செய்தாா்.