/

மகாவீா் ஜெயந்தி: காரைக்காலில் நாளை மது விற்பனைக்குத் தடை

News image

மது விற்பனைக்குத் தடை - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:18 pm

காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் கலால் துணை ஆணையா் எம். பூஜா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை :

வரும் 31-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மகாவீா் ஜெயந்தியையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் இயங்கி வரும் கள், சாராயம் மற்றும் பாா் உள்ளிட்ட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களின் பாா்கள் மூடப்பட்டிருக்கவேண்டும்.

இந்த நாளில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. மீறுவோா் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.