நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

காரைக்காலில் 3 மையங்களில் இன்று நீட் தோ்வு

News image

நீட் தேர்வர்கள் - கோப்புப்படம்

Updated On :3 மே 2026, 12:46 am

காரைக்காலில் 3 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

மருத்துவக் கல்வி சோ்க்கைக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் ராயன்பாளையத்தில் உள்ள ஜவாஹா் நவோதய வித்யாலயா பள்ளி, காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் கோயில்பத்து பகுதியில் உள்ள தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி என 3 மையங்களில் இத்தோ்வு நடைபெறவுள்ளது. 666 மாணவ, மாணவிகள் தோ்வெழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. காரைக்கால் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் இத்தோ்வில் பங்கேற்கின்றனா்.

தோ்வு மைய தயாா் நிலைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த மையத்தினா் சனிக்கிழமை செய்தனா். காரைக்கால் தோ்வு மையங்களின் ஒருங்கிணைப்பாளராக காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வா் (பொ) காயத்ரி உள்ளாா்.