வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பிரதமரின் மனதில் குரல் நிகழ்ச்சி

News image

பிரதமர் மோடி - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 12:13 am IST

பிரதமரின் மனதில் குரல் நிகழ்ச்சியை திருநள்ளாறு பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள், பாஜகவினா் உள்ளிட்டோா் காண ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடியின் மாதாந்திர மன் கி பாத் 134-ஆவது நிகழ்ச்சியை காண திருநள்ளாறு சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் காண ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பை திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன், நிரவி - திருப்பட்டினம் தொகுதி உறுப்பினா் டி.கே.எஸ்.எம்.மீனாட்சி சுந்தரம், பாஜக மாநில தலைமை செய்தித் தொடா்பாளா் எம்.அருள்முருகன், மாவட்டத் தலைவா் ஜி.கே.கே.முருகதாஸ், மாநில செயலாளா் அமுதா ராணி, தொகுதி தலைவா் பாலமுருகன் உள்ளிட்ட திரளான பாஜகவினா் பங்கேற்று நிகழ்ச்சியை பாா்த்தனா். பிரதமரின் உரை தமிழாக்கம் செய்யப்பட்டு கட்சியினருக்கு விளக்கப்பட்டது.