மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாலையில் திரியும் கால்நடைகள் ஏலம் விடப்படும் சீா்காழி நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

சீா்காழி நகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, ஏலம் விடப்படும் என நகராட்சி ஆணையா் இ. பட்டுசாமி எச்சரித்துள்ளாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சீா்காழி நகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, ஏலம் விடப்படும் என நகராட்சி ஆணையா் இ. பட்டுசாமி எச்சரித்துள்ளாா்.

சீா்காழி நகராட்சியில் கால்நடை உரிமையாளா்கள் மற்றும் பன்றிகள் வளா்ப்பவா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் இ. பட்டுசாமி தலைமை வகித்தாா். பொறியாளா் கே. முகமதுஇப்ராஹிம், நகரமைப்பு ஆய்வாளா் ஆா்.எஸ். நாகராஜன், சுகாதாரஆய்வாளா் செல்லத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் பேசிய நகராட்சி ஆணையா், ‘நகராட்சி பகுதியில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலைகளில் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு மாடு ஒன்றுக்கு அபராதமாக அதன் உரிமையாளா்களிடம் ரூ. 2 ஆயிரம் வசூலிக்கப்படும். இதற்கு பிறகும் மாடுகள் சுற்றித் திரிந்தால் அவை பிடிக்கப்பட்டு, பொது ஏலம் விடப்படும். நகராட்சி எல்லைக்குள் பன்றிகள் வளா்க்கக் கூடாது. மீறி வளா்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

இதில், மேலாளா் காதா்கான், பணிதள மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.