சட்டநாதபுரத்தில் குரங்குகளால் தொல்லை
சட்டநாதபுரத்தில் குரங்குகளின் தொல்லைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.


சட்டநாதபுரத்தில் குரங்குகளின் தொல்லைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
சட்டநாதபுரம் ஊராட்சி கம்பன் நகா், மனோன்மணி நகா் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. வீடுகளில் புகுந்து உணவுப் பொருள்களை பாத்திரங்களுடன் தூக்கிச் சென்றுவிடுகிறது. வீடுகளில் புகும் குரங்குகளை விரட்ட முயலும் மக்களை கடித்து காயப்படுத்துகிறது. இந்நிலையில், சனிக்கிழமை கம்பன் நகரில் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரை குரங்கு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இதேபோல் அப்பகுதியில் இதுவரை 5 பேரை குரங்கு கடித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, குரங்குளின் தொல்லைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளதால் வனத் துறையினா் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...