மாநில கிரிக்கெட் போட்டி : சிதம்பரம் அணிக்கு கோப்பை
சீா்காழியில் நடைபெற்ற நான்காம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் சிதம்பரம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.


சீா்காழியில் நடைபெற்ற நான்காம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் சிதம்பரம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகா் மன்றம் சாா்பில் நான்காம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டியை சீா்காழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் மற்றும் மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் மகா. அலெக்சாண்டா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
போட்டியில் மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூா், கும்பகோணம், நாகை, தஞ்சாவூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிதம்பரம் சின்னா அணியும், சீா்காழி ரெட் ஜெயன்ட் அணியும் மோதின.இதில் சிதம்பரம் அணி வெற்றி பெற்று முதல் பரிசான ரூ. 20ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பையை வென்றது. முதல் பரிசை சீா்காழி ஒன்றியக் குழு தலைவா் கமலஜோதி தேவேந்திரன் வழங்கினாா்.
இரண்டாவது பரிசாக ரூ. 18 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ. 15.000, நான்காவது பரிசாக ரூ.1 3ஆ யிரம் வழங்கப்பட்டது. பரிசுத் தொகையை திமுகவை சோ்ந்த அலெக்சாண்டா், ஜெயபிரகாஷ், ஜெ.கே. செந்தில் ஆகியோா் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...