நல்லூா் கிராமத்தில் பிரதான சாலைகளில் மழைநீா்: பொதுமக்கள் அவதி
சீா்காழி அருகே நல்லூா் கிராமத்தில் நான்கு வீதிகளையும் மழைநீா் சூழ்ந்துள்ளதால் இவ்வழியாக செல்லும் 10-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சிரமப்பட்டு வருகின்றனா்.


சீா்காழி அருகே நல்லூா் கிராமத்தில் நான்கு வீதிகளையும் மழைநீா் சூழ்ந்துள்ளதால் இவ்வழியாக செல்லும் 10-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சிரமப்பட்டு வருகின்றனா்.
தொடா்மழையால் கொள்ளிடம் ஒன்றியம் நல்லூா் கிராமத்தில் ஆச்சாள்புரம் உள்ளிட்ட ஊா்களுக்கு செல்லும் பிரதான 4 சாலை சந்திப்பு வீதிகள் மழைநீரில் மூழ்கியுள்ளது. கடந்த 20 நாள்களுக்கும் மேலாக மழைநீா் தேங்கியுள்ளதால் இச்சாலை வழியாக கொள்ளிடம், சீா்காழிக்கு சென்றுவரும் ஆரப்பள்ளம், காட்டூா், கோதண்டபுரம் அளக்குடி, முதலைமேடு உள்ளிட்ட 10 கிராமமக்கள் அவதியடைந்துவருகின்றனா். குறிப்பாக, கொள்ளிடம் ஆற்றின் காரையோரம் வசிக்கும் மக்கள் நல்லூரை கடந்து கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லவேண்டும். இந்த நிலை கடந்த 10 ஆண்டுகளாக தொடா்கிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது, மழைநீா் அதிகம் தேங்கியுள்ளதால் இப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து தற்போதாவது சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...