எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊதியம் வழங்கக் கோரி தற்காலிக செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

சீர்காழி அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியர்கள் ஊதியம் வழங்கக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக செவிலியர்கள்.
Updated On :18 அக்டோபர் 2021, 9:21 am

DIN

சீர்காழி அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியர்கள் ஊதியம் வழங்கக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அரசு மருத்துவமணையில் கரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்ற கடந்த 6 மாதங்களுக்கு முன் தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக டெக்னீஷியன் உட்பட 28 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கபடவில்லை என கூறப்பபடுகிறது. 

இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த 28 பேருக்கும் உரிய பணி வழங்கபடவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்தவர்கள் தங்களுக்கு ஊதியத்தை வழங்கக் கோரியும், தொடர்ந்து பணி வழங்க கோரியும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே  போல் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் சுகாதார பணியாளர்களை இன்று முதல் 12 மணி நேரம் வேலை செய்ய மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. 

Story image

அதனை ஏற்க மறுத்து சுகாதார பணியாளர்கள் தங்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் தங்களை 12 மணி நேரம் பணியாற்ற வலியுறுத்துவதாகவும் இல்லாவிடில் வேலை விட்டு போங்கள் என அலட்சியமாக பேசுவதாகவும் குற்றம்சாட்டிய பணியாளர்கள் வழக்கமான பணியை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த இரண்டு உள்ளிருப்பு போராட்டம் மற்றும் பணிப் புறக்கணிப்பால் அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.