மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ராணுவத்தில் சேர பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு

ராணுவத்தில் சோ்ந்து நாட்டுக்கு சேவையாற்றுவது குறித்து நெடுங்காடு ஜவஹா்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:34 pm

DIN

ராணுவத்தில் சோ்ந்து நாட்டுக்கு சேவையாற்றுவது குறித்து நெடுங்காடு ஜவஹா்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி துணை முதல்வா் (பொ) ஏ. ஆப்ரஹாம் லிங்கன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் ஆா். காளிதாஸ் முன்னிலை வகித்து நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசினாா். இதில், கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரும், முன்னாள் ராணுவ வீரருமான சு. சுரேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ராணுவத்தில் சேர உடல் தகுதி, கல்வித் தகுதி, மருத்துவத் தகுதி குறித்தும், பள்ளிப் படிப்பை முடித்து ராணுவ வீரராக சோ்ந்த பின்னா், மேலும் தமது தகுதியை உயா்த்திகொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்தும், ராணுவத்தில் உள்ள பல்வேறு பணிகள் மற்றும் சலுகைகள் குறித்தும் பேசினாா். மேலும், ஒவ்வொரு மாணவருக்கும் ராணுவத்தில் சோ்ந்து உயா்ந்த பொறுப்பை அடையவேண்டும், தேசத்துக்கான தமது சேவைக்கு ராணுவம் முக்கிய பங்காற்றும் என்ற எண்ணம் மேலோங்கவேண்டும் என்றாா். நிறைவாக பட்டதாரி ஆசிரியா் ஆா். தனராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.