தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவெண்காட்டில் பாரதியார் நினைவு நூற்றாண்டு அஞ்சலி

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் மெய்கண்டார் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் உள்ள பாரதியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image

திருவெண்காட்டில் பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு

Updated On :11 செப்டம்பர் 2021, 11:39 am

DIN

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் மெய்கண்டார் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் உள்ள பாரதியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட மெய்கண்டார் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாரதியார் நூற்றாண்டு நிறைவையொட்டி அவரது உருவ சிலை திறக்கப்பட்டது.

இதையும் படிக்க | 

அவருடைய நினைவு நாளை ஒட்டி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருவெண்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் துரைராஜன் ஆகியோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதில் தமிழ் அறிஞர்கள் தாண்டவமூர்த்தி, மாரியப்ப பிள்ளை, ராஜேஷ்குமார், அம்பேத், நல்லாசிரியர் கோவிந்தராஜன், திமுக பிரமுகர்கள் ஜெயக்குமார், முத்தமிழ், சீர்காழி கிழக்கு ஒன்றிய அதிமுக இலக்கிய அணி செயலாளர் திருநாவுக்கரசு, பள்ளி தலைமை ஆசிரியை ஹேமலதா, கோவில் மேலாளர் சிவக்குமார் உள்ளிட்ட திரளான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.