சீர்காழி: படகு கவிழ்ந்து மீனவர் பலி

சீர்காழி அருகே கடலில் அலையின் சீற்றத்தினால் படகு கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கோப்புப்படம்
கோப்புப்படம்

சீர்காழி அருகே கடலில் அலையின் சீற்றத்தினால் படகு கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, கொட்டாய்மேடு சுனாமி நகரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் (40). ஜெயபாலுக்கு திருமணமாகி மலர் என்ற மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மீனவரான இவர் இன்ஜின் பொருத்தப்படாத படகு ஒன்றில் கரையோரத்தில் மீன் பிடித்துள்ளார்.

அப்போது படகு கவிழ்ந்ததில் ஜெயபால் நிலைதடுமாறிய கடலில் விழுந்து உள்ளார். தண்ணீரில் மூழ்கிய அவரை சக மீனவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கடற்கரை காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து ஜெயபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com