மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சீர்காழி அருகே மழை நிவாரணம் கோரி சாலை மறியல்

சீர்காழி அடுத்த பச்சை பெருமாநல்லூரில் மக்கள், விவசாயக் கூலி தொழிலாளர்கள் சாலை மறியல் ஈடுப்பட்டுள்ளனர்.

News image
Updated On :14 டிசம்பர் 2022, 7:23 am

DIN

சீர்காழி அடுத்த பச்சை பெருமாநல்லூரில் மக்கள், விவசாயக் கூலி தொழிலாளர்கள் சாலை மறியல் ஈடுப்பட்டுள்ளனர்.

தொடர் மழையால் வேலை, வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாய கூலி  தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மழைக் கால நிவாரணமாக பத்தாயிரம் வழங்க வேண்டும், கனமழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை  மீண்டும் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், அனைத்து கூரை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெறுகிறது.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நடைபெற்ற நிலையில் வட்டாட்சியர் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் ஒட்டுமொத்தமாக எல்லாரையும் கைது செய்ய கூடுதலாகக் வாகனம் கொண்டு வர வேண்டும் சிலரை மட்டும் கைது செய்யக் கூடாது எனக்கூறி கைது செய்யப்பட்டு அமர்த்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை சிறை பிடித்து வாகனத்தின் முன்பு சாலையில் படுத்து மறியலில் ஈடுப்பட்டவர்கள் தர்ணா செய்தனர்.

Story image

இதனிடையே கைது செய்யப்பட்டு வாகனத்தில் இருந்தவர்களும் போலீஸ் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வாகனம் முன்பு சாலை அமர்ந்து மீண்டும் சாலை மறியல் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.