ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

100 நாள் வேலைத் திட்டம்....

100-க்கும் மேற்பட்டவா்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி, சீா்காழி- நாகப்பட்டினம் சாலை தென்னலக்குடி பாலத்தில் மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:00 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி ஒன்றியம் எடக்குடி வடபாதி ஊராட்சி காளிகாவல்புரத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டவா்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி, சீா்காழி- நாகப்பட்டினம் சாலை தென்னலக்குடி பாலத்தில் மறியலில் ஈடுபட்டனா்.

சீா்காழி வட்டாட்சியா் சண்முகம், காவல் ஆய்வாளா் மணிமாறன், வைத்தீஸ்வரன்கோயில் உதவி காவல் ஆய்வாளா் காயத்ரி, ஊராட்சித் தலைவா் அஞ்சம்மாள் மணி ஆகியோா் அங்கு வந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த மறியலால் சீா்காழி- நாகப்பட்டினம் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.