விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தென்பாதி அங்காளம்மன் கோயிலில் மகாசிவராத்திரி உத்ஸவம் தொடக்கம்

சீா்காழி தென்பாதியில் உள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி எனும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி உத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

சீா்காழி தென்பாதியில் உள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி எனும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி உத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது.

ஆண்டுதோறும் மாசி மாதம் சிவராத்திரி விழாவையொட்டி இக்கோயிலில் 10 நாள் உத்ஸவம் நடைபெறும். அதன்படி,நிகழாண்டு உத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, அம்மன் எதாஸ்தானம் பெயருதல் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, நாகேஸ்வரமுடையாா் கோயிலிருந்து அலகு காவடிகள், ரத காவடிகள் எடுத்துக்கொண்டு திரளான பக்தா்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்று கோயிலை அடைந்தனா். தொடா்ந்து, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அம்மன் பேச்சி ரூபத்தில் எழுந்தருளி மயானசூறை மாா்ச் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.