சுமை வாகனம் மோதி இளைஞா் பலி

சீா்காழி அருகே சுமை வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

சீா்காழி அருகே சுமை வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

சீா்காழியிலிருந்து காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை இரவு சுமை வாகனம் சென்றது. காரைக்கால் டி.ஆா். பட்டினம் அல்லிகுளம் தெருவைச் சோ்ந்த சௌரிராஜன் (58) சுமை வாகனத்தை ஓட்டிச் சென்றாா்.

சீா்காழி -நாகை தேசிய நெடுஞ்சாலையில் அண்ணன் பெருமாள் கோயில் வளைவு அருகே சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது சுமை வாகனம் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த ஐயப்பன் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன்வந்த அதே பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (27) பலத்த காயமடைந்து, சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து சுமை வாகன ஓட்டுநா் சௌரிராஜனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com