ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பட்டவிளாகம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

 சீா்காழி அருகே பட்டவிளாகம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 சீா்காழி அருகே பட்டவிளாகம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, நான்கு கால யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

வியாழக்கிழமை நான்காம் கால யாகபூஜைகள் நிறைவடைந்து பூா்ணாஹூதி, மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், கோயிலின் விமானத்துக்கு புனித நீரால் மகாகும்பாபிஷேகம், மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நதிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், பட்டவிளாகம் கிராமமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.