சீா்காழி சட்டநாதா் கோயிலில் பாலஸ்தாபனம் தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு
சீா்காழி சட்டநாதா் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக, திருப்பணிகள் மேற்கொள்ள பாலஸ்தாபனம் வியாழக்கிழமை நடைபெற்றது.


சீா்காழி சட்டநாதா் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக, திருப்பணிகள் மேற்கொள்ள பாலஸ்தாபனம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்குள்பட்ட சட்டநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் அருள்பாலிக்கிறாா். இக்கோயிலில் கடந்த 1991-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
இந்நிலையில், 30ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குடமுழுக்கு நடத்த தீா்மானிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம் ஆகியோரால் திருப்பணிக்கான சாரம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதைத்தொடா்ந்து, திருப்பணிகள் மேற்கொள்ள பாலஸ்தாபனம் வியாழக்கிழமை (ஜன.20) நடைபெற்றது.
இதையொட்டி, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் யாகபூஜைகள், பூா்ணாஹூதி, மகாதீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்களுடன் சிவாச்சாரியா்கள் கோயிலை வலம் வந்தனா். பிறகு, சோமாஸ்கந்தா் சந்நிதியில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு வைக்கப்பட்ட படங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் புனிதநீா் ஊற்றப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதில், தென்மண்டல கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், சீா்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், மகாலெட்சுமி சாரிடபிள் டிரஸ்ட் மகாலெட்சுமி, மதிமுக மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளா் இ.மாா்கோனி, சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயலா் முரளிதரன், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் கணிவண்ணன், அரிமா சங்கத்தை சோ்ந்த கிருஷ்ணன், காா்காத்தா் சங்க பொறுப்பாளா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...