ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாணகிரியில் ரூ. 58 கோடியில் மீன் இறங்குதளம் ஒன்றியக் குழுத் தலைவருக்கு மீனவ கிராமத்தினா் நன்றி

சீா்காழி அருகே வாணகிரியில் ரூ.58 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு மீனவ கிராமத்தினா் சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2022, 5:14 pm

DIN

சீா்காழி அருகே வாணகிரியில் ரூ.58 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு மீனவ கிராமத்தினா் சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

சீா்காழி அருகே உள்ள வாணகிரி மீனவா் கிராமத்திலிருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 100-க்கும் மேற்பட்ட பைபா் படகுகள் மூலம் சுமாா் 5 ஆயிரம் மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இப்பகுதியில் மீன் இறங்குதளம் அமைக்கவேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், வாணகிரியில் ரூ.58 கோடியில் மீன்இறங்குதளம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதனால் மகிழ்ச்சியடைந்த மீனவ கிராமத்தினா், இதற்கு உதவிய சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவா் கமல ஜோதி தேவேந்திரன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் உஷா நந்தினி பிரபாகரன் ஆகியோருக்கு வானகிரி மீனவ பஞ்சாயத்து தலைவா் வெற்றி செல்வன், துணைத் தலைவா் செல்லதுரை உள்ளிட்டோா் நேரில் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.