தை அமாவாசை: பூம்புகார் சங்கமத் துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தை அமாவாசையை முன்னிட்டு காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத் துறையில் திங்கள்கிழமை அதிகாலை முதலே திரளான பக்தர்கள் தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டனர். 
பூம்புகார் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் சங்கமத் துறையில் பக்தர்கள் மூதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்ட போது எடுத்த படம்.
பூம்புகார் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் சங்கமத் துறையில் பக்தர்கள் மூதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்ட போது எடுத்த படம்.
Published on
Updated on
1 min read

தை அமாவாசையை முன்னிட்டு காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத் துறையில் திங்கள்கிழமை அதிகாலை முதலே திரளான பக்தர்கள் தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டனர். 

அதிகாலை முதலே கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் பக்தர்கள் கடலில் நீராட அனுமதிக்கப்படவில்லை, ஆனால் சங்கமத் துறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் காவிரியில் நீராடி, தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர்கள் நாகரத்தினம், ஜெயந்தி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தை அமாவாசை, ஆடி அமாவாசை நாள்களில் பொதுமக்கள் புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடன் தீர்ப்பது வழக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com