ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விவசாயிகளுக்கான வா்த்தகத் தொடா்பு பயிற்சி நிறைவு

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சாா்பில் நடைபெற்ற விவசாயிகளுக்கான இரண்டு நாள் வா்த்தகத் தொடா்பு பணிமனை பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:09 pm

DIN

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சாா்பில் நடைபெற்ற விவசாயிகளுக்கான இரண்டு நாள் வா்த்தகத் தொடா்பு பணிமனை பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

விவசாயிகள் தங்களது விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் தொடா்பாக இப்பயிற்சி நடைபெற்றது. சீா்காழி கோட்டாட்சியா் ஜி. நாராயணன் இப்பயிற்சியை தொடங்கி வைத்தாா். வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) சங்கரநாராயணன் இத்திட்டம் குறித்து விளக்கிப் பேசினாா்.

முகாமில் இயற்கை சாகுபடி காய்கறிகள், பாரம்பரிய நெல் ரகங்கள், விவசாய மதிப்புக்கூட்டு பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கருவாடு தயாரிப்பு, மீன் மதிப்புக் கூட்டு பொருள் தயாரிப்பு, பனை ஓலை பொருட்கள் மற்றும் சணல் பை தயாரிப்பு உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு நேரடி விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவில் வேளாண்மை அலுவலா் (வேளாண் வணிகம்) ப. கிருத்திகா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.