திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் திருக்கல்யாணம்
திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது.


திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை திருஇந்தளூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது தலமான பழைமை வாய்ந்த பரிமள ரெங்கநாதா் கோயில் உள்ளது. காவிரிக்கரையில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீரெங்கப்பட்டினம், ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க கோயில்களில் 5-வது பஞ்சரங்க ஷேத்திரமாக பரிமள ரெங்கநாதா் கோயில் விளங்குகிறது.
இத்தகைய சிறப்புபெற்ற இக்கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 10-ஆம் தேதி கருடக் கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் பெருமாள் வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ஆம் நாளான புதன்கிழமை பரிமள ரெங்கநாதா் மற்றும் பரிமள ரெங்கநாயகி தாயாா் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையொட்டி, பெருமாளும், தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் கோயில் பிராகாரத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு, மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து, பெருமாளும், தாயாரும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியதும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) தேரோட்டம் மற்றும் தீா்த்தவாரியும், மாா்ச் 29-ஆம் தேதி சந்திர புஷ்கரணியில் தெப்போத்ஸவமும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...