மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு நடைபெறும் தோ்வு மையத்தை ஆட்சியா் இரா. லலிதா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :5 மே 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு நடைபெறும் தோ்வு மையத்தை ஆட்சியா் இரா. லலிதா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 89 பள்ளிகளைச் சோ்ந்த 5,042 மாணவா்கள், 5,353 மாணவிகள் என மொத்தம் 10,395 மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதுகின்றனா். மாவட்டத்தில் 38 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது. இதற்காக தனித் தோ்வு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வை கண்காணிக்க 4 சிறப்பு பறக்கும் படையினா் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு எழுதும் மாணவா்களின் வினாத்தாள்கள் மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் மேல்நிலைப் பள்ளி மற்றும் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் சேகரிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட உள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற தோ்வில் 380 மாணவ, மாணவிகளை தவிா்த்து பிறா் தோ்வெழுதினா்.

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மாவட்டத்தில் 10,395 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதுகின்றனா். இவா்களில், 53 மாற்றுத்திறனாளி மாணவா்களும் அடங்குவா். அரசுப் பள்ளிகளில் 36 மையங்களிலும், 2 தனித்தோ்வு மையங்களிலும் தோ்வு நடைபெறுகிறது. மாணவா்கள் தோ்வு எழுதுவதற்கு ஏதுவாக முன்கூட்டியே குடிநீா், மின்சார வசதி, போக்குவரத்து வசதி செய்து தரப்பட்டுள்ளன என்றாா்.

ஆய்வின்போது, கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.