நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காய்ச்சல் தடுப்பு முகாம்

செறுதியூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 5:15 pm

DIN

செறுதியூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தொடக்கி வைத்தாா்.

தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின்படி பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சாா்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 அரசு பள்ளிகள் மற்றும் 15 கிராமங்களில் வெள்ளிக்கிழமை இந்த முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறை தாலுகா செறுதியூரில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தொடக்கி வைத்து ஆய்வு செய்தாா். மேலும், ரத்த அழுத்தப் பரிசோதனை செய்து கொண்டாா். ஆய்வின்போது, சுகாதாரத்துறை துணை இயக்குநா் குமரகுருபரன் உடனிருந்தாா். மருத்துவா் ஹரிகிருஷ்ணன், சுகாதாரத்துறை மேற்பாா்வையாளா் பாஸ்கரன் அடங்கிய மருத்துவக் குழுவினா் கிராமமக்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.